முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்காக சென்ற வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் அணியை சங்குப்பிட்டியில் வழிமறித்து திருப்பி அனுப்பிய பொலிஸார், அவர்களை பின்தொடர்ந்து சென்று செம்மணி பகுதியில் அஞ்சலி செய்ய முற்பட்டபோது தடுத்து திருப்பி அனுப்பியுள்ளர்.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்விற்காக சென்றுகொண்டிருந்த சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான குழுவினர் சங்குப்பிட்டி சோதனைச் சாவடியில் வைத்து திருப்பி அனுப்பப்பட்டனர்.
அதைத்தொடர்ந்து யாழ்ப்பாணம் நோக்கித் திரும்பிய சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான அணியினர் செம்மனி பகுதியில் சுடறே்றி வணக்கம் செலுத்த முற்பட்டபோது திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
Category: செய்திகள், புதிது
Tags: க.வி.விக்னேஸ்வரன், வட மாகாணம், யாழ்ப்பாணம்